Sunday 3 June, 2012

என்ன ஒரு வில்லத்தனம்?!?


ஒய் திஸ் கொலவெறி? இந்த கேள்வி கொல்கத்தா வெற்றி பெற்றதை கொண்டாடாமல், சென்னை தோற்றத்தை கொண்டாடிய ஆங்கில ஊடகங்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும். இதே மன நிலையில் பெரும்பாலான இந்தியர்கள் இருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதனை சென்னை ஒரு தென் இந்திய அதுவும் தமிழகத்து அணி என்பதால், வட இந்திய ஊடகங்கள் இப்படி நடந்துகொண்டன என்று நினைப்பவர்கள் நிச்சயம் பகைமை விரும்பிகள் தான். ஒருவேளை மகாராஷ்டிராவில் உள்ளதைப்போல தமிழகத்தில் இரு அணிகள் இருந்து கோவையும் சென்னையும் இறுதியாட்டத்தில் மோதியிருந்தால் கூட ஒட்டுமொத்த இந்தியாவும் சென்னைக்கு எதிராக திரும்பியிருக்கும். காரணம் நம் எல்லோரிடத்திலும் உள்ள ஒரு குரூரன் தான்.



·         கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் சென்னையின் ஆதிக்கம்

·         இந்த(பொதுவாகவே) லீக் போட்டிகளில் பெரிய அளவில் பிரமாத படுத்தவில்லை ஆனாலும் இறுதி போட்டியில் விளையாடும் அணி

·         நடந்த ஐந்து போட்டித்தொடரில் நான்கில் இறுதியில் விளையாடிய அணி.


இவை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த நம்மிலுள்ள குரூரன் சென்னைக்கு எதிராக திரும்பி விடுகிறான். சென்னை மற்ற அணிகளின் தயவால், அதிர்ஷ்டதின் தயவால் வெற்றிபெறும் ஒரு அணி என்ற நிலைபாட்டுக்கு வந்துவிடுகிறான் குரூரன். முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சென்னை அணியின் திறமையை ஒரு பொருட்டாக கருதாமல், லீக் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் அணிதான் திறமையான அணி என்று கருதுகிறான் நம் குரூரன். அதே முதல் இடத்தை பிடிக்கும் அணி முக்கிய போட்டிகளில் சொதப்பும்போது, அதிர்ஷ்டமில்லை என கருதுகிறான். நம்ம அணி, நம்ம ஊர் அணி என்ற பிணைப்பு எண்ணங்கள் மேலோங்கி இருப்பதால் சென்னை அணியை நேசிப்பவர்களிடதிலும், தமிழக மக்களிடமும் இந்த குரூரன் வெளிப்படிருக்க வாய்ப்பில்லை.


ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பத்து ஆண்டுகள் வென்று கொண்டிருக்கும்போது, ஆஸ்திரேலிய அல்லாத அனைத்து நாட்டு கிரிகெட் ரசிகர்களும் தம்முடைய அணி தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற கூடாது என்று நினைத்தனர். அந்த எராளமான புன்னியவான்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக செயல்படும் ஒரு குழுவில் ஒருவனின் செயல்பாடு மட்டும் மிகச்சிறந்ததாக இருப்பின், அவனை கவிழ்க்க சதி வலை பின்னப்படும் யதார்த்தம் தான் உள்ளது. டெஸ்ட் அணியை தலைமை தாங்க தோனிக்கு தகுதி இல்லையாம், காம்பீர் தலைமை ஏற்க போகிறாராம். காம்பீர் தம்பி.....! நீங்க நல்லா வருவிங்க! வாழ்த்துக்கள்!!!

கொல்கத்தா வெற்றி பெற்றதை கொண்டாடாமல், சென்னை தோற்றத்தை கொண்டாடிய அனைவருக்கும் எனது கடுமையான கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன். இது கொல்கத்தாவின் உழைப்பு மற்றும் திறமையை அவமானப் படுத்துவதாகும். தானே தலைவர் கங்குலி அணியில் இல்லாமல் போனது தனிப்பட்ட முறையில் கொஞ்சம் வருத்தம் தான் ஆனாலும் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எனது வாழ்த்துக்கள்!!


படித்ததில் பிடித்த குட்டி கதை

ஒரு பெண்மணி தனது வீட்டு வாயிலில் உள்ள திண்ணையில் நீண்ட தாடி வைத்த மூன்று பெரியவர்கள் அமர்த்திருப்பதை கவனித்தவள், அருகே சென்று “ஐயா உங்களை அடையாளம் கொண்டுகொள்ள முடியவில்லை. பார்த்தல் பசியுடன் இருப்பதை போல தெரிகிறது உள்ளே வாருங்கள் சாப்பிடலாம்” என்றாள்.

ஒரு பெரியவர் “உங்கள் கணவர் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“இப்பொழுது இல்லை, இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்” என்றாள்.

“உன் கணவர் இல்லாத நேரத்தில் நாங்கள் உள்ளே வர முடியாது, கணவர் வந்தவுடன் சாப்பிட வருகிறோம்” என்றார் அந்த பெரியவர்.

சிறிது நேரத்தில் அவளுடைய கணவன், வீட்டுக்கு வந்தான். அவள் கணவனிடம் நடந்ததை கூறினாள். கணவன் அவர்களை அழைத்து சாப்பிட வை என்றான்.

திண்ணைக்கு சென்று தன் கணவன் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறி, சாப்பிட அழைப்பு விடுத்தாள்.

“நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் வர முடியாது” என்றார்.

அவள் திகைத்து ஏன் என்றாள்.

“என்பெயர் செல்வம்” மற்ற இவர்களையும் காட்டி இவர் வெற்றி அவர் அன்பு என்ற அந்த பெரியவர் எங்களில் ஒருவரைத்தான் விருந்துக்கு அழைக்க முடியும் என்றார்.

“உன் கணவனிடம் கலந்தாலோசித்து எங்களில் யாரை அழைக்கிறாய் என்று கூறு” என்றார் அந்த பெரியவர்.

உள்ளே சென்று நடந்தை கூறியவள், செல்வத்தை அழைக்கலாம் என்றாள் கணவனோ வெற்றியை அழைத்தால், பேரும் புகழும் கிடைக்கும் என்றான்.

வாக்கு வாதத்தை அமைதியாக கவனித்துகொண்டிருந்த சிறுமியான அவர்களுடைய செல்ல மகள் அன்பை அழைக்கலாம், வீடு அன்பால் நிறையட்டும் என்றாள்.

தங்களுடைய வாக்கு வாதத்தை நிறுத்திவிட்டு, மகள் யோசனை படி அன்பை அழைக்க முடிவெடுத்தனர்.

பெரியவர்களை நோக்கி “உங்களில் யார் அன்பு என்றாள்?” அன்பை விருந்துக்கு அழைக்கிறேன் என்றாள்.

அன்பை தொடர்ந்து, செல்வமும் வெற்றியும் வீட்டிற்கு வந்தனர். திகைத்து நின்ற அந்த பெண்மணியை பார்த்து.

 ”என்னையோ அல்லது செல்வதையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வந்திருக்க மாட்டோம், அன்பு இருக்கும் இடத்தில் தான் நாங்களும் இருப்போம்” என்று சொன்னார் வெற்றி.
 

Monday 7 May, 2012

ஜெயிக்க போவது யாரு?

வெண்பனிபிரதேசமாம் கனடாவின் லண்டன் நகரின் ஒரு அழகிய ஞாயிறு பிற்பகல் பொழுது. ஆறு இந்திய பிரஜைகள். உண்ட களைப்பையும் மீதமிருக்கும் பொழுதையும் கழிக்க உத்தேசித்தனர். அருகிலுள்ள பிலியர்ட்ஸ் மையத்துக்கு சென்றனர். பாக்கெட் பிலியர்ட்ஸ்  (பூல்) விளையாட முடிவுசெய்து மேசையும் பதிவு செய்தாயிற்று. கூட்டம் அதிகமில்லாததால் மேசை உடனடியாக வழங்கப்பட்டது. ஆறு பேரில் மூன்று பேருக்கு ஆட்டம் பரீச்சயமானது அதில் இருவர் கில்லாடிகள். இந்த இரு கில்லாடிகளும் இரு அணிகளுக்கு  தலைமை தாங்க தயராக இருந்தனர்.

அணிகள் ஆனா மற்றும் ஆவன்னா என பிரிக்கப்பட்டது. அணி 'ஆனா'வில் தலைவர், ஆட்டம் ஓரளவுக்கு தெரிந்த ஒருவர் மற்றும் முதல் முறை விளையாடும் ஒருவர். அணி 'ஆவன்னா'வில் தலைவர் மற்றும் இரண்டு புதுமுகங்கள். புதுமுகங்களுக்கு இந்த விளையாட்டு  கிட்ட தட்ட கேரம் போல, வில்லைகளுக்கு பதில் பந்துகள், வில்லை அடிப்பானுக்கு பதில் ஒரு பந்து, விரலை பயன்படுத்துவதற்கு பதில் ஒரு கழி என ஒரு மாதிரியாக அறிமுகம் செய்துவைக்கபட்டது. மொத்தமுள்ள பதினைந்து பந்துகள் முக்கோண வடிவில் படத்தில் உள்ளதை போல அடுக்கபட்டது. எழு பந்துகள் முழு நிறத்துடனும் ஏழு பந்துகள் பகுதி வெள்ளையாகவும் பகுதி மற்ற நிறத்துடனும் இருந்து. மேலும் ஒரு கருப்பு நிற பந்து இதனை கடைசியாகத்தான் குழியில் தள்ளவேண்டும். அடிக்க பயன்படும் வெள்ளை பந்து  மேசையின் மறுபுறத்தில் வைக்கப்பட்டது.

அணி ஆனாவின் தலைவர் ஆட்டத்தை ஆரம்பித்தார். ஒரே அடியில் அழகாக முக்கோண வடிவில் அடுக்கப்பட்ட பந்துகள் தாறுமாறாக கலைக்கப்பட்டு ஒரு முழுநிறபந்து மட்டும் ஈசானி மூலையில் உள்ள குழியில் விழுந்தது. இப்பொழுது முழுநிற பந்துகளை ஆனாவும், கலவைநிற பந்துகளை ஆவன்னாவும் குழிகளில் தள்ள வேண்டும். பந்து குழியில் விழுந்ததால் ஆனா தலைவர் மீண்டும் விளையாடினார். முழுநிற பந்தொன்று குழிக்கு சற்று முன்பே சக்தியிழந்து நின்றது. இது ஆவன்னா தலைவரின் முறை. கலவைநிற  பந்தொன்றை கிட்டத்தட்ட அறுபது டிகிரி கோணத்தில் லாவகமாக அடித்து குழியில் தள்ளி, அணி பேதமின்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். அடுத்த பந்தையும் சிரமமின்றி குழியிலிட்டார். மூன்றாவது முறை அடிபந்து குறிதவறி முழுநிற பந்தை தொட்டு விட்டதால். எதிரணிக்கு  இருமுறை ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது, அடுத்து ஆனாவில் உள்ள சுமாராக விளையாடும் நபரின் முறை. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. எதிரணி தவறிழைத்திருந்தமையால் இவருக்கு இன்னொரு வாய்ப்பு இருந்தது. இமுறை இவரது அணித்தலைவர் அருகில் வந்து, ஒரு பந்தை குறிப்பிட்டு அதனை மெதுவாக தட்டு உள்ளே விழுந்துவிடும் என்றார். அதைப்போலவே நடந்தது. தொடர்ந்து விளையாடினர்.

இப்பொழுது ஆவன்னா அணியிலுள்ள புதுமுகம் ஒருவரின் முறை, அவரின் அணித்தலைவர் அருகில் வந்து ஒரு பந்தின் ஒரு புள்ளியை குறிப்பிட்டு இங்கு மிதவேகத்தில் அடித்தால் எளிதில் அந்த குழியில் விழுந்துவிடும் என்றார். ஆனால் ஆடும் நபர் தலைவரை பார்த்து இந்த பந்தை குழியில் தள்ளுவது கடினம் என்றும் மற்றொரு பந்தை குறிப்பிட்டு இது எனக்கு எளிதாகபடுகிறது இதனை முயற்சிக்கிறேன் என்றார். தலைவர் தான் குறிப்பிட்ட பந்து தான் எளிமையானது, அதனையே அடிக்க முடியவில்லை என்றால் உன்னால் இங்கிருக்கும்  எந்தபந்தையும்  குழியில்  அடிக்க  முடியாது என்றார். புதுமுகம் தலைவர் சொன்னபடியே ஆடினார். பந்து குழியில் விழவில்லை, தலைவர் அவரை பார்த்து இன்னும் சற்று மெதுவாக அடித்திருக்க வேண்டும் என்றார். இதைப்போலவே ஆனா அணியின் தலைவரும் வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று அணி உறுப்பினர்களின் சுய முயற்சிகளை தடுத்தார். ஒருவழியாக ஆட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனா அணி வெற்றி பெற்றது. ஆவன்னா அணியின் தோல்விக்கு புதுமுகங்கள் முக்கிய காரணமாக கருதப்பட்டது.

நேரம் இருந்தமையால் இன்னும் இரண்டு ஆட்டம் ஆடலாம் என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஆனாவில் இருந்த சுமாராக விளையாடும் நபரை ஆவன்னா அணிக்கும், ஆவன்னாவில் இருந்த ஒரு புதுமுகத்தை ஆனாவுக்கும் மாற்றினர். இம்முறையும் நன்றாக விளையாட தெரிந்த தலைவர்களே ஆதிக்கம் செலுத்தினர். மீண்டும் அணி ஆனாவே வெற்றி பெற்றது. புதுமுகங்களில் ஒருவர் புதுமுகங்கள் ஒரு அணியாகவும் நன்கு விளையாட தெரிந்தவர்கள் ஒரு அணியாகவும் இருக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார்  ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது என்று அனைவரும் மறுத்தனர். ஆனால் அவர் இதனை முயற்சிக்கவேண்டும் என்று அனைவரையும் சம்மதிக்க வைத்தார். யோசனையை முன்வைத்தவர் நம் அணியில் தலைவர் யாரும் இல்லை அனைவரும் உறுப்பினர்கள்தான். யாரும் யோசனை சொல்லவோ பெறவோ போவதில்லை,  நாம் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்து விளையாட வேண்டாம், தங்களால் முடிந்ததை செய்வோம் என்றார். மற்ற இரு புதுமுகங்களும் இதற்கு சம்மதித்தனர்.

அன்றைய கடைசி ஆட்டம் ஆரம்பமானது. தலைவர்கள் அணியில் இரண்டுபேருமே தலைவர்களாக செயல்பட்டனர். புதுமுகங்களால் பெரியதாக எதையும் செய்யமுடியாது என்றும் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கபோவதில்லை என்றும் திடமாக நம்பினர். புதுமுகங்கள் அணி மெதுவாக தங்களின் பந்துகளை குறைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தலைவர்கள் அணி நான்கு பந்துகளையும், புதுமுகங்கள் இரண்டு பந்துகளையும் குழியில் தள்ளியிருந்தனர்.  அப்பொழுது  புதுமுகம் ஒருவர் ஆடினார். அவர் தொடர்ந்து மூன்று பந்துகளை குழிக்கு அனுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  தலைவர்கள் அணி வெற்றிபெற்றாக வேண்டும் என்ற அழுததில் ஆடினர். புதுமுகங்கள் அனைவருமே நிதானமாக ஆடி அசத்தினர். இரு அணிகளும் தங்களது அனைத்து பந்துகளையும் குழிக்கு அனுப்பிவிட்டனர்.  கருப்பு பந்து மட்டுமே எஞ்சியிருந்தது  எந்த அணி இதனை அடிக்கிறதோ அது வெற்றிபெறும் என்ற நிலையை அடைந்தது. கடைசியில் தலைவர்கள் அணி வென்றது.

ஆனால் புதுமுகங்கள் அணியின் செயல்பாடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் சிந்திக்கவும் வைத்தது.  அழுத்தப்பட்ட சூழ்நிலைகளில் பெரும்பாலும் முழுமையான திறன் வெளிபடுவதில்லை.  தலைவர்கள் அல்லது மூத்தவர்கள் இளையவர்களுக்கு இதை இப்படி செய், அதை அப்படி செய் என்று அழுத்தத்தை கொடுப்பதற்கு பதிலாக பொறுப்புகளை கொடுக்கலாம். செயல்பாடு நிச்சயமாக வேறுமாதிரியாக இருக்கும். மேலே சொல்லப்பட்டது ஏதோ ஒரு தத்துவத்தை விளக்க தயாரிக்கப்பட்ட கதையல்ல என்னை பாதித்த என்வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வு. தந்தை-மகன், ஆசிரியன் - மாணவன். தலைவன் - தொண்டன். மேலாளர் - தொழிலாளி. இப்படி எல்லா உறவுகளிலும், அழுத்தம் ஒன்றே நல்ல முடிவை தரும் என்ற அவ நம்பிக்கை இருக்கிறது. கேட்டால் உன்னுடைய நல்லதுக்குதான் என்று சொல்வது. குறிப்பாக ஆசிரியன் - மாணவன் உறவில் பயன் படுத்தப்படும் அழுத்ததை நிச்சயமாக களைய வேண்டும், இதுதான் வருங்கால சமுதாயத்தின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்க கூடியது.

படித்ததில் பிடித்த குட்டிகதை
*********************************************************************************************************

மக்கள் எவ்வளவு ஏழைகளாக வாழ்கிறார்கள்  என்பதை சிறுவனான தன்  மகனுக்கு உணர்த நினைத்தார் ஒரு செல்வந்தர். ஒரு நாள் தன் மகனை கிராம பகுதிகளுக்கு அழைத்து சென்றார். பயணம் முடிந்து திரும்பும் வழியில். மகனை பார்த்து பயணம் எப்படி இருந்தது? என்றார். "நன்றாக இருந்தது" என்றான். "மக்கள் எவ்வளவு ஏழைகளாக இருக்கிறார்கள் என்று பார்த்தாயா?" என கேட்டார். "ஓ பார்த்தேனே" என்றான். "பயணத்திலிருந்து என்ன தெரிந்து கொண்டாய்?" என்று வினவினார்.

"நம்ம கிட்ட ஒரே ஒரு நாய்தான் இருக்கு, அவங்ககிட்ட நிறைய இருக்கு, நாம பசுமைக்காக கார்டன் ல கொஞ்சமா புற்கள் வளர்கிறோம். அவங்க வயல்வெளிகள் மிகப் பெரிய பரப்பில் பசுமை படர்ந்து கிடக்கிறது. நம்ம சாப்பாடுக்கு கடையில வாங்குறோம், அவங்க தேவையானத உற்பத்தி செஞ்சிகிறாங்க, நம்மளோட பாதுகாப்புக்காக வீட்டை சுற்றி சுவர் எழுப்பி இருக்கோம்,  அவங்கள சுத்தி நல்ல நண்பர்கள் இருக்காங்க" என்றான்.

வாயடைத்து நின்ற தந்தையை நோக்கி, "நம்ம எவ்வளவு ஏழையாக இருக்கோம் னு காட்டியதற்கு நன்றிப்பா!" என்றான்.

Friday 27 January, 2012

பொங்கலோ பொங்கல் – பொங்கலும் பொங்கலை சார்ந்த படங்களும் பகுதி - 2(நிறைவு)

ஓடிக்கிட்டே ஊசியில நூல் கோக்குறாங்க!

நாங்கலாம் வுட்டா ஒலிம்பிக்கிலே ஓடுவோம்!!


இவங்க எதுக்கு இப்படி நிக்கிறாங்க?? அப்டியே போய் அடுத்த போட்டோவ பாருங்க!!

பாட்டில் தண்ணி நிறைக்கிறாங்க!!

இதையும் ஒலிம்பிக்கில சேருங்கப்பா..




மியுசிக் சேர்



விடாத இழு அவ்ளோதான்..





ஒரு பிஸ்கட் சாப்பிட இவ்ளோ கஷ்டபடனுமா?



எங்கோ படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டி கதை – 2


குதிரையில் பயணம் செய்த படைத்தளபதி ஒருவன் தன் வழியில் குறுக்கிட்ட ஆற்றை கடக்க நினைத்தான். ஆனால் அவனுக்கு ஆற்றின் ஆழம் தெரியாததால் அக்கம்பக்கத்தில் யாராவது தென்படுகிரார்களா என்று பார்த்தான்.

அங்கே ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தான். சிறுவனிடம் குதிரையில் ஆற்றை கடக்க முடியுமா என்று வினவினான். குதிரையின் உயரத்தை பார்த்த சிறுவன் கடக்கலாம் என்றான்.

சற்று தூரம் சென்ற தளபதி ஆழம் அதிகம் என்பதை உணர்ந்த தளபதி மீண்டும் கரைக்கு வர சிரமப்படவேண்டியிருந்தது. தப்பி வந்த தளபதி சிறுவனை பார்த்து கடுங்கோபத்துடன் ஏன் பொய் சொன்னாய் என்று கேட்டான்.

சிறுவன் “உங்கள் குதிரையை விட சிறிய கால்களுடைய வாத்துகள் எளிதில் ஆற்றை கடப்பதை பார்த்திருக்கிறேன்” என்றான்.

Thursday 19 January, 2012

பொங்கலோ பொங்கல் – பொங்கலும் பொங்கலை சார்ந்த படங்களும் பகுதி - 1


கடைகுட்டியின் கைவண்ணம்..



தாய்மை


கரிநாளுக்கு கறியானவர்..


கடுங்குளிரிலும் பச்சதண்ணிலயே குளிக்கவிடுரிங்களே..

ஏரோட்டி நெ-1


ஏரோட்டி நெ-2- கொம்புக்கு வர்ணம் இல்லை இம்முறை.. கொம்பு சீவ தொம்பன் கிடைக்கலையாம்..

ஒழச்சி ஓடா தேஞ்சவரு.. ஓட்டாண்டி ஆனவரு..
தானேவில் தவறிப்போன கருவேப்பிலையார்..






மூணு மாசத்துக்கு ஒருக்கா போனாலும் மறக்காம பாசத்துடன் வரவேற்பார்..

திருந்திடாங்கப்பா


இன்று முதல் பதிவின் முடிவில் படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டிகதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளகிறேன்.


குட்டி கதை - 1

நிரம்ப ஏற்றிய கரும்புடன் வண்டியொன்று மேம்பாலத்தின் கிழே நின்றுகொண்டிருப்பதை கவனித்த மாடுமேய்க்கும் சிறுவன். கரும்பு எடுக்கலாம் என்று அருகே நெருங்கினான். வண்டியருகே ஐந்து பேர் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்து பிரச்சனை என்ன என்பதை அறிந்துகொண்டான்.

வண்டி பாலத்தினை கடந்து செல்லவேண்டுமானால் வண்டியின் உயரம் இரண்டு அங்குலம் குறைக்கப்படவேண்டும். அங்கிருந்தவர்கள் கரும்பை பிரித்து பாலத்தை கடந்தவுடன் ஏற்றலாமா இல்லை பத்து கிலோமீட்டர் சுற்றி வேறு வழியாக செல்லலாமா என்று தீவரமாக ஆலோசித்து கொண்டிருந்தார்கள்.

சிறுவன் அவர்கள் அருகே சென்று “நான் ஒரு யோசனை சொல்கிறேன் எனக்கு ஒரு கரும்பு தருகிறீர்களா?” என்றான்.

சொல்லு உன்னோட யோசனையை என்றார்கள். “வண்டியின் டயரில் உள்ள காற்றை குறைத்து முயற்சி செய்து பாருங்கள்” என்றான்.

சிறுவனுக்கு கரும்புடன் பாராட்டுகளும் கிடைத்தது. வண்டி பாலத்தை கடந்தது பின்பு காற்று நிரப்பப்பட்டு ஆலையை நோக்கி பயணப்பட்டது.